Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை முடக்காதது ஏன்? - பாக்யராஜ் விளக்கம்
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம், கே பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்து பெரும் வெற்றி பெற்ற இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி ஆகும்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாக்யராஜ், தனக்கு நஷ்டஈடாக ரூ 2 கோடி தரவேண்டும் என்றுகோரி வழக்குப்பதிவு செய்தார். ஆனால் படத்துக்கு அவர் தடை கோரவில்லை. படமும் வெளியாகிவிட்டது.
பாக்யராஜின் அனுமதியின்றி அந்தக் கதையைக் காப்பியடித்து படமெடுத்தது மட்டுமின்றி, இப்போது அந்தக் கதையே தன் சிந்தனையில் உதித்த சொந்தக் கதை என்று அடாவடியாக பொய் கூறி வருகிறார் சந்தானம்.
இந்த நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த பாக்யராஜ் கூறுகையில், "நான் நடித்து, இயக்கிய வேட்டிய மடிச்சு கட்டு படம் ஒருநாள் காலதாமதமாக திரைக்கு வந்ததால், பல சோதனைகளை சந்தித்தேன். அன்று நான் கண்ணீர்விட்டு அழுதேன்.
அதுபோன்ற ஒருநிலை எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
ராம நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் டைட்டிலில் என் பெயரை போடவேண்டும் என்றும், அந்த படத்தின் வசூல் விவரத்தை எனக்கு அனுப்பவேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியிருந்தேன்.
இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பு நடந்தபோது, சந்தானம் தினமும் என்னை சந்தித்ததாகவும், தினமும் என்னென்ன காட்சி படமாக்கினார்கள் என்று எனக்கு விளக்கியதாகவும் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. சந்தானத்தை மாப்பிள்ளை விநாயகர் என்ற படபூஜையின்போது ஒரே ஒருமுறைதான் சந்தித்தேன். அதன்பிறகு அவரை, நான் பார்த்ததே இல்லை.
இந்த பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, என்னை சமாதானப்படுத்தியதாகவும், நான் பெரிய தொகையை வாங்கிக்கொண்டதாகவும் இன்னொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். தமிழ் படஉலகில், எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எனக்கு ஏற்பட்ட பாதிப்பு, எதிர்காலத்தில் மற்றவர்களுக்குக்கூட நடக்கலாம். அதற்காகவே நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
இந்த பிரச்சினை தொடர்பாக புஷ்பா கந்தசாமி, என் மனைவி பூர்ணிமாவை 2 முறை சந்தித்து பேசினார். பிரச்சனையை பெரிதுபடுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அதை அவரே இப்போது மறுக்கிறார்.
சந்தானம் அளித்த ஒரு பேட்டியில் இது, இன்று போய் நாளை வா படத்தின் கதைதான் என்று கூறியிருந்தார். இப்போது, என் சிந்தனையில் உதித்த கதை என்று மனசார பொய் சொல்கிறார்," என்றார்.