Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?'
தன் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்பதாக எழந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார் நடிகர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா முதல் முறையாக நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, நாயகிகள் ரேஷ்மி மேனன், சான்ட்ரா, கலையரசன், அப்புக்குட்டி, காளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, இசையமைப்பாளர் அச்சு ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹா, "இந்தப் படம் நிறைய தடைகளைத் தாண்டி வருகிறது. சக்திவேல் இந்தக் கதையை ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அனைத்தும் நல்லபடியாக நடக்க எங்கள் தயாரிப்பாளர் டில்லி பாபுதான் காரணம். நாங்கள் கேட்ட எதையும் அவர் மறுக்காமல் செய்து கொடுத்தார்," என்றார்.
அவரிடம், "நீங்கள் முதலில் அறிமுகமான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தில் டப்பிங் பேசி முடிக்க, லாபத்தில் பாதியைக் கேட்கிறீர்கள் என்று புகார் எழுந்துள்ளதே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, "முதலில் ஒரு குறும்படம் என்று சொல்லித்தான் அதில் என்னை நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது பெரிய படமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதற்குரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். இதை யாராவது கேட்டீர்களா?" என்றார்.
நியாயமான கேள்வி.. அதான் இப்ப நீங்க கேட்டதையே போட்டாச்சே பாபி!