Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'படத்தோட லாபத்துல பாதிய கேக்கறீங்களாமே... நிஜமா பாபி சிம்ஹா?'
தன் சம்பளத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்பதாக எழந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார் நடிகர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா முதல் முறையாக நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, நாயகிகள் ரேஷ்மி மேனன், சான்ட்ரா, கலையரசன், அப்புக்குட்டி, காளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, இசையமைப்பாளர் அச்சு ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹா, "இந்தப் படம் நிறைய தடைகளைத் தாண்டி வருகிறது. சக்திவேல் இந்தக் கதையை ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அனைத்தும் நல்லபடியாக நடக்க எங்கள் தயாரிப்பாளர் டில்லி பாபுதான் காரணம். நாங்கள் கேட்ட எதையும் அவர் மறுக்காமல் செய்து கொடுத்தார்," என்றார்.
அவரிடம், "நீங்கள் முதலில் அறிமுகமான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தில் டப்பிங் பேசி முடிக்க, லாபத்தில் பாதியைக் கேட்கிறீர்கள் என்று புகார் எழுந்துள்ளதே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாபி சிம்ஹா, "முதலில் ஒரு குறும்படம் என்று சொல்லித்தான் அதில் என்னை நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது பெரிய படமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதற்குரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். இதை யாராவது கேட்டீர்களா?" என்றார்.
நியாயமான கேள்வி.. அதான் இப்ப நீங்க கேட்டதையே போட்டாச்சே பாபி!