Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகல! - 'மனசைத் திறந்தார்' தனுஷ்
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு '3' படத்தில் சினிமா வாய்ப்பு வழங்கியவர் தனுஷ்.
தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான நாயகனாக்கினார். காக்கிச் சட்டையிலும் அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தார் தனுஷ்.
ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு இருவருக்கும் உரசல் என்று தகவல் பரவியது. இதுகுறித்து கேட்கும்போதெல்லாம் இருவருமே பூசி மெழுகி பதில் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை சமீபத்தில் வெளிப்படையாகவே கூறிவிட்டார் தனுஷ்.
மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், "சிவகார்த்திகேயனுக்கு எங்கள் நிறுவனத்தால் சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை. அதனால்தான் அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க முடியவில்லை. மற்றபடி அவர் வளர்வது சந்தோஷம்தான்," என்றார்.