Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர அனில் அம்பானி ஏன் தனி விமானம் அனுப்பினார்?
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பியதில் இருந்து அவரின் உடல் வீட்டை சேரும் வரை தனி அக்கறை எடுத்துள்ளார் தொழில் அதிபர் அனில் அம்பானி.
நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றார். அங்கு தான் அவர் உயிர் இழந்தார். மோஹித் மர்வா தொழில் அதிபர் அனில் அம்பானி மனைவியின் அக்கா மகள் அந்தாரா மோதிவாலாவை திருமணம் செய்துள்ளார்.
ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்ததும் அவரின் உடலை மும்பை கொண்டு வர அனில் அம்பானி ஏற்பாடு செய்தார்.
அனில்
ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர தனது நிறுவனத்திற்கு சொந்தமான தனி விமானத்தை துபாய்க்கு அனுப்பி வைத்தார் அனில் அம்பானி. அந்த விமானத்தில் 13 பேர் அமர முடியும்.
துபாய்
ஸ்ரீதேவி இறந்த செய்தி சனிக்கிழமை இரவு வெளியானது. ஞாயிற்றுக்கிழமை காலை அனில் அம்பானியின் தனி விமானம் துபாயை அடைந்தது. ஸ்ரீதேவி இறந்த சில மணிநேரங்களில் விமானம் துபாய் சென்றது.
விமான நிலையம்
ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தபோது அனில் அம்பானி விமான நிலையத்திற்கு சென்றார். ஸ்ரீதேவியின் உடலை அவரின் வீட்டிற்கு கொண்டு சென்றபோது அனில் அம்பானி தான் முதல் காரில் சென்றார்.
மரியாதை
ஸ்ரீதேவியின் உடல் எந்தவித பிரச்சனையும் இன்றி அவரின் வீட்டை அடைய வேண்டும் என்பதில் அனில் அம்பானி தீவிரமாக இருந்தார். அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டது ஸ்ரீதேவியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.