அம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா?
Recommended Video

மும்பை: முகேஷ் அம்பானி மகள் திருமணத்தின்போது ஆமீர் கானும், அமிதாப் பச்சனும் ஏன் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார்கள் என்று அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் அமிதாப் பச்சன் மற்றும் ஆமீர் கான் ஆகியோர் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.

அவர்கள் இருவரும் உணவு பரிமாறியதை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ் போடப்பட்டது. ஆமீர் கானும், அமிதாபும் அம்பானி வீட்டு திருமணத்தில் ஏன் உணவு பரிமாறினார்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேட்டார். அதற்கு அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பதில் அளித்துள்ளார்.
அபிஷேக் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
சஜ்ஜன் காட் என்னும் வழக்கம் அது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு உணவு பரிமாறுவார்கள் என்றார்.
முகேஷ் அம்பானி வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் அதில் ஆமீர் மற்றும் அமிதாப் குடும்பத்தார் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











