Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் அம்மாவுக்கு உட்கார இடம் கொடுக்காமல் 20 நிமிடம் நிற்கவிட்டார் நடிகை ப்ரீத்தி: நெஸ் வாடியா
மும்பை: தான் நடிகையும், முன்னாள் காதலியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா மீது கோபப்பட்டதற்கான காரணத்தை தொழில் அதிபர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், அவரது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள். 5 ஆண்டுகளாக காதலர்களாக சுற்றி வந்த பிரீத்தியும், நெஸ் வாடியாவும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நெஸ் வாடியா பார்வையாளர்கள் முன்பு தன்னை மிரட்டி, தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்ததாக ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து நெஸ் வாடியா கூறுகையில்,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. நான் மே 30ம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வாங்கடே ஸ்டேடியத்தின் கர்வாரே பெவிலியனில் 14 சீட்கள் முன்பதிவு செய்தேன். அத்தனை சீட்கள் முன்பதிவு செய்த போதிலும் என் வயதான தாய் மவ்ரீன் வாடியா உட்கார இருக்கை இன்றி 20 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தார்.
காரணம் அந்த இருக்கைகளில் ப்ரீத்தி மற்றும் அவரது விருந்தாளிகள் அமர்ந்து கொண்டது தான். ஒரு வயதான தாயை கொஞ்சம் கூட இரக்கமின்றி நிற்க வைத்ததால் தான் ப்ரீத்தி மீது கோபம் வந்தது. ஆனால் அவரோ இதை திசை திருப்பி பாலியல் தொந்தரவு கொடுத்தேன் என்று புகார் கொடுத்துள்ளார் என்றார்.