தமன்னாவை மணப்பது ஏன்?: நடிகர் சவுந்தரராஜா விளக்கம்
Recommended Video

சென்னை: தமன்னாவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் சவுந்தரராஜா.
நடிகர் சவுந்தரராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த சவுந்தரராஜா ஹீரோவாகியுள்ளார்.

திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. முதலில் நடிகை தமன்னாவோ என்று நினைத்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகே இது வேறு ஒரு தமன்னா என்று தெரிந்து நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமன்னாவை தேர்வு செய்தது குறித்து சவுந்தரராஜா தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கல்யாணமே வேணாமுன்னு இருந்தேன்....அதுக்கு பல காரணம் இருக்கு.ஒரு நாளு...,என் ஆத்தா மாதி அன்பு காட்டுற ஒரு பொண்ண பாத்தேன்., பாத்தவுடனே முடிவு பண்ணிட்டேன் .. நிச்சயமாகிடுச்சு ..! உங்கள் அன்போடும் , ஆசிர்வாதங்களோடும் ... என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











