Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காசு வாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டாரா ப்ரியா ஆனந்த்?
சென்னை: மதம் மாறியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.
நடிகை ப்ரியா ஆனந்த் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்களை போன்றே நோன்பு வைக்கிறார். இது குறித்து அறிந்த நெட்டிசன்களோ இந்துவான ப்ரியா எதற்காக நோன்பு வைக்க வேண்டும். அப்படி என்றால் அவர் மதம் மாறிவிட்டாரோ என்று பேசத் துவங்கினர்.
சிலரோ ஒருபடி மேலே போய் திரையுலக பிரபலங்கள் மதம் மாற அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. ப்ரியா கூட அப்படி பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறியிருப்பார் என்றனர்.
பாவம் அதர்வா, இப்படி சோதனை மேல் சோதனையா?
மேலும் சிலரோ ப்ரியா எம்மதமும் சம்மதம் என்பது போன்று இப்படி போலியாக நடிப்பதை பார்க்க கடுப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தன்னை பற்றிய ட்வீட்டுகளை பார்த்த ப்ரியா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Why aways assumythe worst? Maybe it's not fake! Maybe I do respect and value all of it!??! Common u guys let's be loving and lovable! 🤗
— Priya Anand (@PriyaAnand) May 11, 2019
மதம் குறித்து ப்ரியா ட்வீட் செய்திருப்பதாவது,
ஏன் எப்பொழுதுமே எதையாவது மோசமாக கணிக்கிறீர்கள்? இது போலியாக இல்லாமல் இருக்கலாம். நான் அனைத்து மதங்களையும், அதன் சம்பிரதாயங்களையும் மதிப்பவளாக இருக்கலாம். அன்பாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.