காசு வாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டாரா ப்ரியா ஆனந்த்?
சென்னை: மதம் மாறியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.
நடிகை ப்ரியா ஆனந்த் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்களை போன்றே நோன்பு வைக்கிறார். இது குறித்து அறிந்த நெட்டிசன்களோ இந்துவான ப்ரியா எதற்காக நோன்பு வைக்க வேண்டும். அப்படி என்றால் அவர் மதம் மாறிவிட்டாரோ என்று பேசத் துவங்கினர்.

சிலரோ ஒருபடி மேலே போய் திரையுலக பிரபலங்கள் மதம் மாற அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. ப்ரியா கூட அப்படி பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறியிருப்பார் என்றனர்.
மேலும் சிலரோ ப்ரியா எம்மதமும் சம்மதம் என்பது போன்று இப்படி போலியாக நடிப்பதை பார்க்க கடுப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தன்னை பற்றிய ட்வீட்டுகளை பார்த்த ப்ரியா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மதம் குறித்து ப்ரியா ட்வீட் செய்திருப்பதாவது,
ஏன் எப்பொழுதுமே எதையாவது மோசமாக கணிக்கிறீர்கள்? இது போலியாக இல்லாமல் இருக்கலாம். நான் அனைத்து மதங்களையும், அதன் சம்பிரதாயங்களையும் மதிப்பவளாக இருக்கலாம். அன்பாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











