Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
அமலா பாலை சந்தித்து ஏன், தகவல் கொடுத்தது யார்?: தொழில் அதிபர் வாக்குமூலம்
Recommended Video
சென்னை: நடிகை அமலா பாலை சந்தித்து பேசியது ஏன் என்று கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் அழகேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் அழகேசன்(40) என்ற தொழில் அதிபர் தன்னிடம் வந்து பாலியல் தொழிலுக்கு(sexual trade) அழைப்பது போன்று பேசியதாக நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகேசனை கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம்
மலேசியாவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் அமலா பாலுக்கு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டிக்கு வர அமலா பால் சம்மதித்துள்ளார் என்று என் நண்பர் பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என அழகேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேனேஜர்
அமலா பால் பார்ட்டியில் கலந்து கொள்வதை மீண்டும் உறுதி செய்தி வருமாறு கூறி பாஸ்கர் அமலாவின் மலேசியா தொடர்பு எண்ணை அளித்தார். அந்த எண்ணுக்கு போன் செய்தபோது அமலாவின் மேனேஜர் எடுத்து அவரை நடனப் பயிற்சி பள்ளியில் சென்று பார்க்குமாறு கூறினார் என்று அழகேசன் விசாரணையின்போது கூறியுள்ளார்.
நான் இல்லை
அழகேசனிடம் நான் பேசவே இல்லை. அவர் எனக்கு போன் செய்யவே இல்லை என்று அமலா பாலின் மேனேஜர் தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடம் நேரம் எல்லாம் தெரிந்து தான் அழகேசன் வந்ததாக அமலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகார்
அழகேசன் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசியதால் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்ததாக அமலா பால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.