Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் ஏன் 'ஐ' இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை?: சுரேஷ் கோபி விளக்கம்
சென்னை: பிரமாண்ட விழாக்களில் தான் கலந்து கொள்வது இல்லை என்றும் அதனால் தான் ஐ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த திங்கட்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் கலந்து கொண்டார்.
ஆனால் படத்தின் வில்லனான சுரேஷ் கோபி கலந்து கொள்ளவில்லை.
பிரச்சனை
ஷங்கருக்கும், சுரேஷ் கோபிக்கும் இடையே டேட்ஸ் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் தான் அவர் விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
சுரேஷ் கோபி
ஐ பட இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்தேன் என்றார் சுரேஷ் கோபி.
பிரமாண்டம்
பெரும் செலவு செய்து பிரமாண்டமாக நடக்கும் விழாக்களில் பங்கேற்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஐ விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.
விளம்பர நிகழ்ச்சி
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் என சுரேஷ் கோபி கூறினார்.