Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஐபி 2 இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் மனைவி ஏன் வரவில்லை?: சவுந்தர்யா விளக்கம்
சென்னை: விஐபி 2 இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளாததன் காரணத்தை தெரிவித்துள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
விழாவில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை.
தனுஷ்
இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் யார், யாருக்கோ மாஞ்சு, மாஞ்சு நன்றி சொன்னார். மனைவி ஐஸ்வர்யா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஐஸ்வர்யா
ஒரு முக்கிய விவகாரம் தொடர்பாக தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தான் ஐஸ்வர்யா விஐபி 2 பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சவுந்தர்யா
விஐபி 2 விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளாததன் காரணத்தை தற்போது சவுந்தர்யா தெரிவித்துள்ளார். இயக்குனரான ஐஸ்வர்யா புதிய படத்திற்கு கதை எழுதுவதில் பிசியாக உள்ளார். அதனால் தான் விழாவுக்கு வரவில்லை என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
வாழ்த்து
ஐஸ்வர்யா விஐபி 2 விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவரின் வாழ்த்துக்கள் எப்பொழுதும் எங்களுக்கு உண்டு. தனுஷை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அக்கா என சவுந்தர்யா கூறியுள்ளார்.