Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் நின்று போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்தையே பிரமாண்டமாக நடத்தி அசத்திவிட்டனர்.
திருமணம்
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. இத்தாலி பயணத்தை ரத்து செய்யுமாறு நாகர்ஜுனா உறவினர், நண்பர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரச்சனை
அகில், ஸ்ரேயா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் மனஸ்தாபத்தில் இருந்துள்ளனர்.
குடும்பத்தார்
திருமண ஏற்பாடுகள் செய்வதில் நாகர்ஜுனா, ஸ்ரேயா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதனால் ஏற்கனவே அகில், ஸ்ரேயா இடையே இருந்த பிரச்சனை பெரிதாகி பிரிந்துவிட்டார்களாம்.
காதல் முறிவு
அகில், ஸ்ரேயா காதலை முறித்துக் கொள்ள திருமணம் நின்றுவிட்டது. இந்த திருமணம் நின்றுள்ளது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.