twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவி இறந்தவுடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் 3 மணிநேரம் போனி என்ன செய்தார்?

    By Siva
    |

    Recommended Video

    ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் யார்?- வீடியோ

    துபாய்: ஸ்ரீதேவியின் கணவர் செய்த செயல் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.

    திருமணம் முடிந்ததும் போனி குஷியை அழைத்துக் கொண்டு மும்பை சென்றுவிட்டார்.

    போனி

    போனி

    ஸ்ரீதேவிக்கு சர்பிரைஸ் கொடுக்கிறேன் என்று சொல்லி போனி கபூர் சனிக்கிழமை துபாய்க்கு சென்றுள்ளார். மாலை 5. 30 மணிக்கு ஹோட்டலை அடைந்த அவர் ஸ்ரீதேவியுடன் 15 நிமிடங்கள் பேசியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    மரணம்

    மரணம்

    டின்னருக்கு வெளியே செல்ல ஸ்ரீதேவி மாலை 5.45 மணிக்கு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியே வராததால் போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் குளியல் தொட்டியில் மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார்.

    போலீஸ்

    போலீஸ்

    ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்த போனி கபூர் உடனே தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்துள்ளார். 6 மணிக்கு ஸ்ரீதேவியை மூச்சு பேச்சு இல்லாமல் பார்த்த நிலையில் இரவு 9 மணிக்கு தான் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்ததாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஏன்?

    ஏன்?

    ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்து போனி கபூர் ஏன் உடனே தகவல் கொடுக்காமல் 3 மணிநேரம் கழித்து போலீசாரை அணுகினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    According to Gulf News, Boney Kapoor informed Dubai Police about Sridevi's condition by 9 pm on saturday. But he found her in the bath tub by 6 pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X