Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஜில்லா' தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் அலுவலகத்தில் 2 மாதத்திற்குள் 2 முறை ரெய்டு ஏன்?
சென்னை: ஜில்லா பட தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் 2 மாதத்திற்குள் 2 முறை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடித்தியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி ஆரம்பம் படம் ரிலீஸான அன்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதே நாளில் மேலும் சில பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஆர்.பி.சௌத்ரி
அக்டோபர் மாதம் 31ம் தேதி ஏ.எம். ரத்னத்தின் வீடு, அலுவலகம் தவிர விஜய்யின் ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஏ.எம். ரத்னம்
ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் நடந்த சோதனையின்போது அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, கடன் தான் இருக்கிறது என்று கடன் பத்திரங்களை காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரெய்டு
ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். இது தவிர அவரது மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
முக்கிய ஆவணங்கள்
சௌத்ரியின் அலுவலகத்தில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாம். அதில் உள்ள விவரங்களின் அடிப்படையிலும், அவர் வரியை சரியாக கட்டவில்லை என்ற தகவலின்பேரிலும் தான் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
ஆர்.பி. சௌத்ரி வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையின் தெரிவித்துள்ளனர்.