Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 2 காரணத்திற்காக தான் என்.ஜி.கே. படத்தில் நடித்தேன்: ரகுல் ப்ரீத் சிங்
Recommended Video
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்தது ஏன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் ஃபிலிமிபீட்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
என்.ஜி.கே. பற்றிய அனைத்தும் பிடித்திருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்தால் நம் நடிப்புத் திறமை மேம்படும் என்று கேள்விப்பட்டேன். மேலும் இது சூர்யா சார் படம். என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. செல்வராகவன் இயக்கிய படங்களில் கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
செல்வராகவன் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கார்த்தியும், சூர்யாவும் வித்தியாசமானவர்கள். இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள், தலைக்கனம் இல்லாதவர்கள். செய்யும் வேலையை இஷ்டப்பட்டு செய்பவர்கள்.
எனக்கு தமிழை விட தெலுங்கு மொழி நன்றாகத் தெரியும். நான் தெலுங்கில் சரளமாக பேசுவேன். இந்நிலையில் தமிழ் வசனத்தை மனப்பாடம் செய்து பேசுவது லைட்டா கஷ்டமாக இருந்தது. அதே சமயம் அந்த சவாலை நான் விரும்பி ஏற்று நடித்தேன்.
நான் பாக்கெட் மணிக்காக தான் முதலில் நடிக்கத் துவங்கினேன். கேமராவுக்கு முன் நின்று நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்தே நடிகையாவது என்று முடிவு செய்தேன் என்றார்.
லைகா குசும்புக்காரன், ரஹ்மானை வச்சு விளம்பரம் தேடப் பாக்குறான்: ரசிகாஸ்
தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து மன்மதுடு 2 படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுடன் நடித்த போதிலும் மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அவரின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்.ஜி.கே. படத்திற்கு தமிழகத்தில் அமோக ஆதரவு கிடைத்தாலும் பிற மாநிலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் கேட்கும் ஒரே கேள்வி கதை என்னப்பா என்பது தான். கதையே புரியவில்லை என்கிறார்கள் அவர்கள். தமிழக ரசிகர்களோ சூர்யாவுக்கும், ரகுலுக்கும் இடையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.