Don't Miss!
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆமாம், கள்ளத்தொடர்பை ஏன் பெரிய விஷயமாக்குகிறார்கள்?: நடிகை கரீனா கபூர்
மும்பை: கள்ளத்தொடர்பை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள் என பாலிவுட் நடிகை கரீனா கபூர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு காலத்தில் பேட்டி அளிக்கும்போது மனதில் பட்டதையெல்லாம் பட், பட்டென்று கூறிவிடுவார். யாதேன் படத்தில் நடித்தபோது திருமணமான ரித்திக் ரோஷனுக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
இது குறித்து கரீனா அப்போது பிலிம்பேருக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது,
திருமணமான ஆண்கள்
நானாவது திருமணமான ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைப்பதாவது. யாதேன் படத்தில் நானும், ரித்திக் ரோஷனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று யார் துடித்தது என தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை கேளுங்கள். நாங்கள் ஹாட்டான ஜோடி என்று ஒப்பந்தம் செய்தார்கள்.
ரித்திக்
ரித்திக் ரோஷன் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு நெடுநேரம் கண்ணாடி முன்பு நிற்பது பயங்கர கடுப்பாக இருக்கும். கபி குஷி கபி கம் படப்பிடிப்பின்போது கஜோல் கூட ரித்திக் மீது கடுப்பானார்.
நடிப்பு
நான் இங்கு நடிக்க வந்துள்ளேன். என்னுடன் நடிப்பது ஃபர்தீன் கானா, அபிஷேக் பச்சனா அல்லது ரித்திக் ரோஷனா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை ஈர்க்கும் ஒரே விஷயம் உணவு. அந்த ஈர்ப்பை கூட தற்போது தவிர்த்துவிட்டேன்.
கள்ளத்தொடர்பு
எனக்கு திருமணமான ஆண்கள் வேண்டாம். ஆனால் கள்ளத்தொடர்பை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள்? ஆண்கள் பெண்களை ஏமாற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
கொன்றுவிடுவேன்
காதலுக்கும், ஈர்ப்புக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. என் வாழ்வில் வரும் ஆண் என்னை ஏமாற்றக் கூடாது. நானும் அவரை ஏமாற்ற மாட்டேன். என் ஆள் என்னை ஏமாற்றினார் என தெரிந்தால் அவரை கொன்றுவிடுவேன்.