Don't Miss!
- News துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?: தயாரிப்பாளர் கேள்வி
கொச்சி: நடிகை காவ்யா மாதவனை கைது செய்யாமல் போலீசார் ஏன் தாமதம் செய்கிறார்கள் என்று மலையாள தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கேரள போலீசார் நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் தனக்கு உத்தரவிட்டு வந்த மேடம் காவ்யா மாதவன் என்று நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் மலையாள மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
காவ்யா மாதவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? போலீசார் அவர் மீது இரக்கம் காட்டுவது ஏன்? ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
காவ்யாவுக்கு பல்சர் சுனியை நன்கு தெரியும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகிவிட்டது. திலீப் கைதானதற்கு நான் தான் காரணம் என்று அனைவரும் நினைக்கிறார்கல். போலீசார் தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள் என்றார்.