Don't Miss!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை காவ்யாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?: தயாரிப்பாளர் கேள்வி
கொச்சி: நடிகை காவ்யா மாதவனை கைது செய்யாமல் போலீசார் ஏன் தாமதம் செய்கிறார்கள் என்று மலையாள தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கேரள போலீசார் நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் தனக்கு உத்தரவிட்டு வந்த மேடம் காவ்யா மாதவன் என்று நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் மலையாள மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
காவ்யா மாதவனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? போலீசார் அவர் மீது இரக்கம் காட்டுவது ஏன்? ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
காவ்யாவுக்கு பல்சர் சுனியை நன்கு தெரியும் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகிவிட்டது. திலீப் கைதானதற்கு நான் தான் காரணம் என்று அனைவரும் நினைக்கிறார்கல். போலீசார் தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள் என்றார்.