twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பக்கா பிளான்.. காயினை பயன்படுத்த விடாமல் அபிஷேக்கை வெளியேற்றிய பிக் பாஸ்.. கடுப்பான ரசிகர்கள்!

    |

    சென்னை: அபிஷேக் ராஜா எலிமினேட் ஆன தகவல் கசிந்ததும் பாவனி, நிரூப் எல்லாம் தங்கள் காயினை கொடுக்காமல் பேக் ஸ்டேப் பண்ணிட்டாங்களா என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.

    ஆனால், ஷோவை பார்த்ததும் தான் புரிகிறது பக்கா பிளான் போட்டு அபிஷேக் ராஜாவை பிக் பாஸ் குழு வெளியே அனுப்பி இருக்கிறது என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

    8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா! 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!

    அந்த காயின்களை பயன்படுத்த விடாமல் பண்ண அந்த விஷயம் நிச்சயம் பலரையும் அப்செட் ஆக்கி உள்ளது.

    ஸ்பாயில் ஆக்குது

    ஸ்பாயில் ஆக்குது

    சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் என்ன நடக்கிறது. யார் வெளியே போகிறார் உள்ளிட்ட விஷயங்களை சில கருப்பு ஆடுகள் இணையத்தில் கசிய விடுவதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் சுவாரஸ்யமே இல்லாமல் ஆகி விடுவதாக அபிஷேக் ராஜாவின் எலிமினேஷன் லீக்கானதும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

    எதிர்பார்த்த படியே

    எதிர்பார்த்த படியே

    அதுதான் கசிந்து விட்டதே ஞாயிற்றுக் கிழமை ஷோவை மறுபடியும் ஷூட் செய்தா விஜய் டிவி போடப் போகிறது என மேட்ச் பார்க்க பல ரசிகர்கள் சென்று விட்டாலும், எப்படி தான் அபிஷேக் வெளியேறினார் என பார்க்க நினைத்த ரசிகர்கள் எதிர்பார்த்த படியே அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேட்ச் தோத்ததுக்கு பிக் பாஸையாவது பார்த்து இருக்கலாம்.

    காயின் பத்தி பேசல

    காயின் பத்தி பேசல

    கடைசியாக இருந்த ஐக்கி பெர்ரி, சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா மூவரில் ஐக்கியை சேவ் பண்ண கமல் அடுத்த அதிரடியாக அபிஷேக் ராஜாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார். ஆனால், காயின் குறித்து கமல் பிக் பாஸிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை.

    பழி வாங்கிய பிக் பாஸ்

    பழி வாங்கிய பிக் பாஸ்

    கமல் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அபிஷேக் ராஜா அப்படி பேசியது குறித்து தெரியாமல் அவரை நிகழ்ச்சியில் உள்ளே அழைத்து வந்து விட்டனர். ஆனால், நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கியதும் அது கமல் பார்வைக்கு சென்றதும் தான் அபிஷேக் ராஜாவின் இந்த வெளியேற்றத்திற்கான காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    காயின் எப்போ யூசாகும்

    காயின் எப்போ யூசாகும்

    பாவம் பாவனி மற்றும் நிரூப் எல்லாம் அபிஷேக் ராஜாவுக்கு காயினை எடுத்துக் கொடுத்து அவரை உள்ளேயே தங்க வைக்க நினைத்தாலும், பிக் பாஸ் சொல்லும் போது தான் அந்த காயின் யூஸ் ஆகும் என குண்டை போட்டு அபிஷேக் ராஜாவை பக்கா பிளான் பண்ணி பார்சல் செய்து விட்டனர். எங்களால ஆஜித்தை காப்பாற்றவும் முடியும் அபிஷேக்கை வெளியே அனுப்பவும் முடியும் என்பதை உணர்த்தி உள்ளது பிக் பாஸ் குழு.

    English summary
    Netizens raises questions, Why Kamal don’t ask about Panchathanthira coin to Bigg Boss and urges Abishek elimination in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X