Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"சாமி 2 படத்திலிருந்து ஏன் விலகினேன்?" - த்ரிஷா விளக்கம்
சென்னை : விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின் ஆனார். இந்தப் படத்தை ஹரி இயக்கி இருந்தார்.
தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் விக்ரம், த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிப்பதாக இருந்தது.
இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்ஸ் வாங்கினார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார் நடிகை த்ரிஷா. இந்த விவகாரம் திரையுலகில் அதிருப்தியை உண்டாக்கியது.
ஏன் விலகினார்
'சாமி 2' படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியத்தும் இருப்பதாலும், தனக்கு ஒரு சில காட்சிகளே இருப்பதாலும் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்பட்டது. சாமி படத்தில் விக்ரம் - த்ரிஷா ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், படத்திலிருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
இது தொடர்பாக 'சாமி 2' படத்தின் தயாரிப்பளார் ஷிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிகை த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. தற்போது தனது விளக்கத்தை த்ரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளார்.
த்ரிஷா விளக்கம்
த்ரிஷா கொடுத்துள்ள விளக்கத்தில், "படத்தில் நான் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். எனது சொந்தக் காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் நடிக்கவைக்க முயற்சி
த்ரிஷா விலகியதற்கு விளக்கம் அளித்துவிட்டார் என்றாலும் த்ரிஷாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் புகாரால் த்ரிஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டதால் இனி 'சாமி 2' படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.