Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
KGF, புஷ்பா, RRR பத்தி பேசுறப்ப, ஏன் அந்த தமிழ்ப் படத்த பத்தி பேசல..? நடிகர் கிஷோரின் ஆதங்கம்
சென்னை: பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகர்தான் கிஷோர். அதற்கு முன் தாய்மொழி கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், வெற்றிமாறனின் துணை இயக்குநர் மூலம்தான் பொல்லாதவன் திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.
முதல் படத்திலேயே யார் இந்த நடிகன் என்று திரும்பிப் பார்க்க வைத்தவர். கன்னட சினிமாவிலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜிற்குப் பிறகு நல்ல ஒரு குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர்.
தற்சமயம் இயக்குநர் மணிரத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள கிஷோர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
’அவன் இவன்’ புகழ் குணசித்திர நடிகர் ராமராஜ் காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!
வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறனின் முதல் படத்தில் தொடங்கி, அசுரன் திரைப்படத்தை தவிர்த்து அனைத்து படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் கிஷோர். ஆடுகளம் திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தில் தனுஷ் நடித்திருந்த கதாப்பாத்திரம் உள்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் grey shade கொண்டதாகவும். கிஷோர் நடித்திருந்த ரோல்தான் grey shade குறைவாக உள்ள பாஸிட்டிவ் கதாப்பாத்திரம் என்றும் வெற்றிமாறன் அப்போது கூறியிருந்தார்.
விவசாயம்
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தனது இடத்தில் அனைத்து வகையான கீரைகள், பழங்கள், காய்கள் என பல்வேறு தாவரங்களை வளர்த்து வருகிறார் கிஷோர். இவரின் தாக்கத்தால்தான் இயக்குநர் வெற்றிமாறனும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் பீம்
சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில், KGF-2 திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைவரும் KGF-2, புஷ்பா, RRR திரைப்படங்களின் வெற்றியை பற்றி பேசுகிறீர்கள். இவை அனைத்தும் ஆக்ஷன் திரைப்படங்கள். ஆனால் ஜெய் பீம் என்ற தமிழ்ப் படத்தின் வெற்றியைப் பற்றி யாருமே பேசவில்லை. நிறைய இந்தி மீடியாக்களே அந்தப் படத்தை கொண்டாடிய நிலையில், அதன் வெற்றியைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
Recommended Video
இந்திய திரைப்படங்கள்
KGF-2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனைவரும் இந்தி திரைப்படங்களை கேலி செய்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. இந்தியிலும் அப்படியான திரைப்படங்கள் வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். அப்போதுதான் மொழிகள் தாண்டி அனைத்து துறையும் முன்னேறும் என்று கிஷோர் கூறியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் "She" என்ற இந்தி வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.