Don't Miss!
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நாசர் பத்தி ஏன் கிசுகிசு வரல தெரியுமா? - ஆர் சுந்தர்ராஜன்
சென்னை: நடிகர் சங்கத் தலைவர் நாசர் பற்றி எந்த கிசுகிசுவும் வராததற்கான காரணத்தை இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் வெளியிட்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கும் விழா நேற்று நடிகர் சங்க வளாகத்தில் அதன் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் பேசியதாவது:
நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவைச் சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு, நீங்கள் விழாவைச் சிறப்பிக்க வரவேண்டும் என்று கூறினார். நாளை காலையில் நினைவுபடுத்துங்கள். கண்டிப்பாக வருகிறேன் என்று நான் கூறினேன்.
இன்று காலை தொலைப்பேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தினார் நாசர். விட்டால் என் வீட்டுக்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார்.
அவர் மனத்தளவில் எப்போதும் நல்ல எண்ணங்களைக் கொண்டவர். எப்போதும் அவர் நல்லதே நினைப்பதால்தான் அவருக்கு எப்போதும் நல்ல பெயர் கிடைக்கிறது. இதுதான் அவரைப் பற்றி கிசுகிசு வராததற்கு முக்கிய காரணம். நடிகர் சங்கத் தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லாத் தகுதியும் உள்ளது," என்றார்.