Just In
- 3 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 9 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 16 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 39 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Automobiles
ஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபுதேவாவுக்கு ‘பத்மஸ்ரீ’.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க மத்திய அரசோட கணக்குப் புரியும்!
சென்னை: தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகர் பிரபுதேவாவுக்கு பூர்வீகம் மைசூர் என்பதால், அவருக்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிருதுகளைப் பெறுபவர்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குநராக, இயக்குநராக மற்றும் நடிகராக பணி புரிந்து வரும் பிரபுதேவா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் மிகவும் பிரபலமானவர் பிரபுதேவா. தமிழ் மற்றும் இந்தி படம் ஒன்றிற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்.

ரசிகர்கள் குழப்பம்:
இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பிரபுதேவாவின் பெயர் கர்நாடகா பிரிவில் இருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரபுதேவாவுக்கு ஏன் கர்நாடகப் பிரிவில் விருது என்பதே அவர்கள் மனதில் தோன்றிய கேள்வி.

மைசூரில் பிறந்தவர்:
ஆனால், பிரபுதேவா கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் என்றாலும், சிறுவயதிலேயே இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. இதனால் இவரை பெரும்பாலானோர் தமிழர் என்றே கருதி வருகின்றனர்.

தமிழில் தான் அதிகம்:
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பிரபுதேவா பிறந்தது கர்நாடகா என்றாலும் இதுவரை அவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் பணி புரியவில்லை. தமிழில் அதிக படங்களில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் அவர் பணியாற்றி உள்ளார். இதனால் தமிழகத்தில் தான் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்தியிலும் ரசிகர்கள்:
இதேபோல், இந்தியில் அவர் இயக்கிய படங்கள் சில தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், அவருக்கு பத்மஸ்ரீ விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் அளிக்கப்பட்டிருப்பது அவரது தமிழ் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.