Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபுதேவாவுக்கு ‘பத்மஸ்ரீ’.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க மத்திய அரசோட கணக்குப் புரியும்!
சென்னை: தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகர் பிரபுதேவாவுக்கு பூர்வீகம் மைசூர் என்பதால், அவருக்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிருதுகளைப் பெறுபவர்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குநராக, இயக்குநராக மற்றும் நடிகராக பணி புரிந்து வரும் பிரபுதேவா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் மிகவும் பிரபலமானவர் பிரபுதேவா. தமிழ் மற்றும் இந்தி படம் ஒன்றிற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்.
ரசிகர்கள் குழப்பம்:
இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பிரபுதேவாவின் பெயர் கர்நாடகா பிரிவில் இருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பிரபுதேவாவுக்கு ஏன் கர்நாடகப் பிரிவில் விருது என்பதே அவர்கள் மனதில் தோன்றிய கேள்வி.
மைசூரில் பிறந்தவர்:
ஆனால், பிரபுதேவா கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் என்றாலும், சிறுவயதிலேயே இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டது. இதனால் இவரை பெரும்பாலானோர் தமிழர் என்றே கருதி வருகின்றனர்.
தமிழில் தான் அதிகம்:
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பிரபுதேவா பிறந்தது கர்நாடகா என்றாலும் இதுவரை அவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் பணி புரியவில்லை. தமிழில் அதிக படங்களில் நடிகராகவும், நடன இயக்குநராகவும் அவர் பணியாற்றி உள்ளார். இதனால் தமிழகத்தில் தான் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்தியிலும் ரசிகர்கள்:
இதேபோல், இந்தியில் அவர் இயக்கிய படங்கள் சில தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், அவருக்கு பத்மஸ்ரீ விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பிரிவில் அளிக்கப்பட்டிருப்பது அவரது தமிழ் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.