சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!
ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சிகப்பு என்ற படத்தை இயக்குநர் - நடிகர் ராஜ்கிரண் வாங்கி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இந்த வாங்கி வெளியிடலின் பின்னணியில் ஒரு பைனான்ஷியல் இழுபறி நடந்திருக்கிறது.

புன்னகைப்பூ கீதா... இவர்தான் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தவர். இவருக்கு படங்களில் நடிக்க வேண்டும், அதுவும் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நீண்ட நாளாக ஆசை. விமலை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டார். ஜோடியாக தானே நடிப்பதாகக் கூறினார். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விமல், ஜோடியாக வேறு நடிகையை போடச் சொல்லிவிட்டார்.
உடனே கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக்கி, சமுத்திரக்கனியை இன்னொரு ஹீரோவாக்கினார்கள். கனிக்கு ஜோடியாக புன்னகைப் பூ கீதா. இந்தப் படத்துக்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்று தலைப்பிட்டனர். படம் தயாரிக்கும் பொறுப்பை மணிரத்னத்தின் உறவினர் சீனிவாசனிடம் ஒப்படைத்தார் கீதா.
இந்த நேரத்தில் கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கிக் கொண்டிருந்த சிகப்பு படத்துக்கு நிதிச் சிக்கல். தயாரிப்பாளர் முக்தா கோவிந்த் உடனே, புன்னகைப் பூ கீதாவை அணுக, அவர் தன் படத்துக்காக வைத்திருந்த பணத்திலிருந்து ரூ 2 கோடியைக் கொடுத்திருக்கிறார். சிகப்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முக்தா கோவிந்த் மரணமடைந்துவிட்டார்.
இப்போது, கீதா தான் கொடுத்த பணத்தைக் கேட்க, முக்தா கோவிந்த் குடும்பத்தினரோ, பணம் இல்லை.. இந்தப் படத்தை நீங்களே வாங்கி வெளியிடுங்கள் என்று கூறிவிட்டார்களாம். ஆனால் அதற்கு கீதா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த சிக்கல்களை அருகிலிருந்து பார்த்த ராஜ்கிரண், படம் நன்றாக வந்திருப்பதால், தானே வாங்கி வெளியிட முடிவு செய்தாராம்.


Click it and Unblock the Notifications