twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செல்வராகவன், ஏன் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறீங்க?'

    By Shankar
    |

    கஷ்டப்பட்டால்தான் எந்தப் படமாக இருந்தாலும் பலன் கிடைக்கும், என்று இயக்குநர் செல்வராகவன் கூறினார்.

    இரண்டாம் உலகம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவனிடம், "நீங்கள் இயக்கும் எல்லா படங்களிலும் நீங்களும் கஷ்டப்பட்டு, நடிகர்-நடிகைகளையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று புகார்கள் கிளம்புவது வழக்கமாகிவிட்டது. இது தேவைதானா?" என்று கேட்கப்பட்டது.

    Selvaraghavan

    அதற்கு பதில் அளித்த செல்வராகவன், "எந்தப் படமாக இருந்தாலும், கஷ்டப்பட்டால்தான் அதற்கான பலன் கிடைக்கும். அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி, நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    இந்த அறைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்தால் கூட, நடிகர்-நடிகைகள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.

    எந்த ஒரு வேலையையும் கஷ்டம் என்று நினைக்கக் கூடாது. நான் இயக்குகிற படங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் உழைக்கிறேன். 2000-ல் நான் டைரக்டராக வந்தேன். இந்த பதிமூன்று வருடங்களில், எல்லாமே மாறிப்போச்சு. ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கே தாக்குப் பிடிக்கவே முடியாது..," என்றார்.

    English summary
    Selvaraghavan says that he is working hard to give his each film with a difference.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X