Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'செல்வராகவன், ஏன் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறீங்க?'
கஷ்டப்பட்டால்தான் எந்தப் படமாக இருந்தாலும் பலன் கிடைக்கும், என்று இயக்குநர் செல்வராகவன் கூறினார்.
இரண்டாம் உலகம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவனிடம், "நீங்கள் இயக்கும் எல்லா படங்களிலும் நீங்களும் கஷ்டப்பட்டு, நடிகர்-நடிகைகளையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று புகார்கள் கிளம்புவது வழக்கமாகிவிட்டது. இது தேவைதானா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்வராகவன், "எந்தப் படமாக இருந்தாலும், கஷ்டப்பட்டால்தான் அதற்கான பலன் கிடைக்கும். அது எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி, நடிகர்-நடிகைகளாக இருந்தாலும் சரி, கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும்.
இந்த அறைக்குள்ளேயே முழு படத்தையும் எடுத்தால் கூட, நடிகர்-நடிகைகள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.
எந்த ஒரு வேலையையும் கஷ்டம் என்று நினைக்கக் கூடாது. நான் இயக்குகிற படங்கள் புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் உழைக்கிறேன். 2000-ல் நான் டைரக்டராக வந்தேன். இந்த பதிமூன்று வருடங்களில், எல்லாமே மாறிப்போச்சு. ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கே தாக்குப் பிடிக்கவே முடியாது..," என்றார்.