Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிகாந்துக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
காதல் திருமணம்
இளையமகளான சவுந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென தனது காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். மகனை தன்னுடன் வளர்த்து வந்த சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகரின் மகனுமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
என்ன காரணம்?
சவுந்தர்யா தனது முன்னாள் கணவரை பிரிந்ததற்கு காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவரை பிரிய அவரது கோபம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
பிடிக்கவில்லை
அதிகமாக கோப்படும் குணம் கொண்ட சவுந்தர்யா, திருமணத்திற்கு பிறகும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என தெரிகிறது. சவுந்தர்யாவின் இந்த குணம், கணவர் அஷ்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.
இதுவே காரணம்
இதுதொடர்பாக ரஜினி எவ்வளவோ எடுத்துக் கூறியதாகவும், இதனால் அஷ்வின் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சவுந்தர்யா அஷ்வின் கூட வாழ விரும்பாமல் விவாகரத்தில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சவுந்தர்யாவின் கோபம்தால் ஏற்பட்ட பிரச்சனைதான் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.