Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிகாந்துக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
காதல் திருமணம்
இளையமகளான சவுந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென தனது காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். மகனை தன்னுடன் வளர்த்து வந்த சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகரின் மகனுமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
என்ன காரணம்?
சவுந்தர்யா தனது முன்னாள் கணவரை பிரிந்ததற்கு காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவரை பிரிய அவரது கோபம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
பிடிக்கவில்லை
அதிகமாக கோப்படும் குணம் கொண்ட சவுந்தர்யா, திருமணத்திற்கு பிறகும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என தெரிகிறது. சவுந்தர்யாவின் இந்த குணம், கணவர் அஷ்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.
இதுவே காரணம்
இதுதொடர்பாக ரஜினி எவ்வளவோ எடுத்துக் கூறியதாகவும், இதனால் அஷ்வின் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் சவுந்தர்யா அஷ்வின் கூட வாழ விரும்பாமல் விவாகரத்தில் உறுதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சவுந்தர்யாவின் கோபம்தால் ஏற்பட்ட பிரச்சனைதான் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.