தனுஷுக்கு டோலிவுட்டில் இப்படியொரு ஃபேன் பேஸா.. 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்ஃபுல்லான ‘3’ திரைப்படம்!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த '3' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீண்டும் ரீரிலிஸ் செய்யப்பட்டுள்ளது.
'3' படம் வெளியான கடந்த இரண்டு நாட்களுக்கும் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளன.
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி மற்றும் வாத்தி படம் வெளியாகும் நிலையில், தனுஷுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படியொரு ஃபேன் பேஸா என மற்ற பிரபலங்களே வியக்கும் அளவுக்கு உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடித்த '3' திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. ஆனால், இங்கே இல்லை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அனிருத் இந்த படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதல் காட்சிகளுக்கு அவர் போட்ட மியூசிக்கும் ஒய் திஸ் கொலவெறி பாடலும் உலக ரசிகர்களையே கவர்ந்தது.

தியேட்டர்கள் தெறிக்குது
ரீ-ரிலிஸ் செய்யப்பட்டுள்ள தனுஷின் 3 திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகின்றன. அதிலும், அந்த ஒய் திஸ் கொலவெறி பாடல்களுக்கு ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று டான்ஸ் ஆடும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. #3Movie என்கிற ஹாஷ்டேக் கோலிவுட் ரசிகர்களை காண்டாக்குகிறது.

தனுஷுக்கு இப்படியொரு ஃபேன் பேஸா
கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டில் நடிகர் தனுஷுக்கு இப்படியொரு ஃபேன் பேஸா என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், உடனடியாக வெளியாகி உள்ள 3 படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தில் இப்படி ரொமான்ஸ் பண்றாரே என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

200 காட்சிகள் ஹவுஸ்ஃபுல்
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏகப்பட்ட தியேட்டர்களில் 3 படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். இரண்டு நாட்களில் மட்டும் இதுவரை 200 காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரியையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் தனுஷின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். பள்ளி மானவனாக, சைக்கோவாக, காதலனாக என வித்தியாசமான நடிப்பை கொட்டித் தீர்த்து இருப்பார் தனுஷ்.

எல்லாம் ’வாத்தி’ கம்மிங்குக்குத்தான்
டோலிவுட்டில் தனுஷின் 3 படம் திடீரென வெளியிட காரணமே வாத்தி தயாரிப்பாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டுத் தானாம். 3 படத்தை போல வாத்தி படத்திலும் நடிகர் தனுஷ் இளம் மாணவனாகவும், வாத்தியாராகவும் நடித்துள்ள நிலையில், இந்த படத்தை இறக்கி ரசிகர்களின் வரவேற்பை வியாபாரத்துக்காக கணக்கிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நானே வருவேன் வருது
இது ஒரு புறமிருக்க இம்மாத இறுதியில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள நானே வருவேன் படத்துக்கும் இதன் மூலம் மிகப்பெரிய பிசினஸ் நடக்கும் என தெரிகிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வனுக்கும் பாகுபலிக்கும் வாய்க்கா தகராறு நடைபெற்று வரும் சூழலில் டோலிவுட் ரசிகர்கள் நானே வருவேன் படத்துக்கு ஏக மனதாக சப்போர்ட் செய்வார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











