Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சென்னையில் அதிகாலை.. டிவி தொடர் நடிகர் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்!
சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை டிவி தொடர் நடிகர் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்டது ஏன் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வள்ளல்பாரி தெருவில் வசித்து வந்தவர், செல்வரத்தினம். வயது 45.
இலங்கையைச் சேர்ந்த இவர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அகதிகள் முகாம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் மெயின் வில்லனாக நடித்து வந்தார். மேலும் சில தொடர்களில் நடித்துள்ளார். கொரோனா பயம் காரணமாக விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்தார். அவர்கள் அங்கு வசிக்கின்றனர்.
சரமாரியாக வெட்டினர்
செல்வரத்தினம் மட்டும், எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டின் அருகே, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த நான்கு பேர், திடீரென செல்வரத்தினத்தை சூழ்ந்துகொண்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
சம்பவ இடத்தில்
அவர் சுதாரிப்பதற்குள் இந்தக் கொலை சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த செல்வரத்தினம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் வெட்டியவர்கள், தப்பி ஓடிவிட்டனர்.
கள்ளக்காதல் பிரச்சினை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்காதல் பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
நண்பர் மனைவி
விருதுநகரைச் சேர்ந்த தனது நண்பர் மனைவியுடன் செல்வரத்தினம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை நண்பர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், அவர் ஆட்களுடன் வந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.