Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி
சென்னை: விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை என்று கமல் ஹாஸன் இன்று தெரிவித்தார்.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது.
அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல், "எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை.
அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல். ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.
ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் வர்த்தகம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாததால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை திரும்ப கமலிடமே திருப்பித் தந்துவிடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.