எதிர் நீச்சல் படத்தில் நயன்தாராவை ஏன் ஆட வைத்தார்கள் தெரியுமா?
சென்னை: எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு நயன்தாராவை ஏன் ஆட வைத்தார்கள் என்ற தெரிய வந்துள்ளது.
நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் தான் எதிர் நீச்சல். சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிவகார்த்திகேயன் ஓட்டப்பந்தய வீரராகவும், பிரியா ஆனந்த் ஆசிரியையாகவும், நந்திதா வீராங்கனையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நயன்தாரா, தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அது ஏன் நயன்தாரா?
குத்தாட்டம் போட எத்தனையோ நடிகைகள் ஆர்வமாக இருக்கையில் நயன்தாராவை ஏன் அழைத்தார்கள் என்று பலருக்கு தோன்றியது.

காதல் தோல்வி
சத்தியமா நீ எனக்கு தேவையில்லை...பத்து நாளா சரக்கடிச்சு போதையில்லை என்ற அந்த பாடலுக்கு காதலில் தோல்வி அடைந்த ஒரு நடிகை ஆடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளனர்.

நயன் ஞாபகம் வந்தது
உடனே படக்குழுவினருக்கு பிரபுதேவாவை காதலித்து பிரிந்த நயன்தாராவின் ஞாபகம் வந்துள்ளது. அவரிடம் கேட்டதற்கு நண்பன் தனுஷ் படம் என்பதால் ஓகே சொல்லி சம்பளம் வாங்காமல் ஆடிக் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











