என்னுடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?: காரணம் சொன்ன எஸ்.ஜே. சூர்யா
Recommended Video
சென்னை: மான்ஸ்டர் படத்தில் ப்ரியா பவானி சங்கர் தன்னுடன் நடிக்க பயந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர், எலி உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. எஸ்.ஜே. சூர்யாவும், எலியும் சேர்ந்து அடிக்கும் லூட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க பயந்ததாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்தார். அவர் ஏன் அப்படி சொல்லியிருப்பார் என்பதற்கான காரணத்தை சூர்யா தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ப்ரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்திருப்பார். குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நாம் அவருடன் ஜோடியாக நடித்தால் சரிபட்டு வருமா என்று அவர் பயந்திருக்கலாம்.
சிம்ரன், நிலா ஆகியோரை அடுத்து எனக்கு ஏற்ற ஜோடியாக உள்ளார் ப்ரியா பவானி சங்கர். மான்ஸ்டர் படத்தில் கவர்ச்சி எதுவும் இருக்காது. நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து வில்லனாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் சூர்யா.


Click it and Unblock the Notifications











