Don't Miss!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்த விளக்கம் எல்லாம் செல்லாது செல்லாது யோகிபாபு.. நீங்க கூர்கா வெற்றிவிழாவை புறக்கணிச்சது சரியில்ல!
கூர்கா வெற்றி விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கூர்கா திரைப்படத்தின் வெற்றி விழாவில் அப்படத்தின் நாயகன் யோகி பாபு கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த கூர்கா திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து படத்தின் வெற்றி விழா சென்னையில் வடபழனியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 8 மணிக்கு தான் விழாவை தொடங்கினர்.
காத்திருப்பு:
நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வதாக யோகி பாபு கூறியிருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வரமுடியவில்லை. யோகி பாபு நிச்சயம் வந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் இயக்குனரும், விநியோகஸ்தரும் காத்திருந்தினர். அவர் வராததே நிகழ்ச்சி தொடங்க தாமதமானதற்கு காரணமாகும்.
விசாரிப்பு:
தான் ஹீரோவாக நடித்த படத்தின் வெற்றி விழாவுக்கே யோகி பாபு ஏன் வரவில்லை என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சிலர் யோகி பாபுவை தொலைபேசியில் அழைத்து விசாரித்தனர்.
கோமாளி படப்பிடிப்பு:
அப்போது, " தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தின் டப்பிங் பணி நடைபெற்று வருவதால் என்னால் வர இயலவில்லை. கோமாளி படத்தில் டப்பிங் பேசி முடித்துவிட்டு, நாளை (இன்று) மீண்டும் ஷூட்டிங் செல்ல வேண்டும்.
கட்டாயம்:
நான் எப்படியாவது வந்து விழாவில் தலைகாட்டிவிட்டு சென்று விடலாம் என முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும், படத்திற்கான படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் வெளியூரில் நடைபெறுகிறது. நாளையில் இருந்து இதில் நான் கலந்துகொள்கிறேன். எனவே கோமாளி படத்திற்கு டப்பிங் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
மனக்கசப்பு இல்லை:
அதனால் தான் என்னால் கூர்கா வெற்றி விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றப்படி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த காரணத்தை நான் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்", என யோகி பாபு விளக்கமளித்தார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!