twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி 3-ம் பாகம் வருமா...? - எஸ் எஸ் ராஜமௌலி விளக்கம்

    By Shankar
    |

    சென்னை: பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு நேற்று உறுதியான பதிலளித்துவிட்டார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

    ஞாயிற்றுக்கிழமை மாலை பிரமாண்டமாய் நடந்த பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவில், எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியதாவது:

    Will 3rd sequel possible for Bahubali?

    "பாகுபலி பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை.

    பாகுபலி படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்து இரண்டு பாகமாக எடுத்தோம்.

    இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், பாகுபலி கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ சொல்ல முடிவு செய்துள்ளோம்.

    இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும்.

    எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். நிச்சயம் அதில் பிரம்மாண்டம் இருக்காது."

    English summary
    Director SS Rajamouli says that there is no chance for Bahubali 3 in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X