Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உரிமம் கிடச்சுடுச்சு...ஆனா டைரக்டர் கிடைக்கல... இந்தி த்ரிஷியம் 2 தாமதத்திற்கு இது தான் காரணமா ?
மும்பை : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2013 ம் ஆண்டு வெளியான த்ரிஷியம் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் ஒரிஜினல் படம் மட்டுமல்ல ரீமேக் படங்களும் சூப்பர் ஹிட் ஆகின.
இதனையடுத்து மலையாளத்தில் த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகத்தை போன்றே 2 ம் பாகமும் திரில்லர் நிறைந்ததாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழிலும் பாபநாசம் 2 தயாரிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்தியிலும் 2 ம் பாகத்தை தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான உரிமத்தையும் தயாரிப்பாளர் குமார் மங்கட் பெற்று விட்டார். இதையும் அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் அஜய் தேவ்கன் வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷியம் இரண்டாவது பாகத்திலும் நடிகை தபுவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
அஜய் தேவ்கன் மற்ற படங்களின் வேலைகளை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் த்ரிஷியம் 2 ம் பாகத்தின் சூட்டிங்கை துவக்கி, அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். தபு, ஸ்ரேயா சரண், இஷிதா தத் ஆகியோரை அதே வேடங்களில் மீண்டும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
எல்லாம் ஓகே தான். ஆனால் டைரக்டர் யார் என்று தான் இதுவரை முடிவுக்கு வர முடியாமல் தயாரிப்பு குழு தவித்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய நிஷிகாந்த் கமத் திடீரென மரணமடைந்ததால், டைரக்டரின் இடம் மட்டும் தற்போது வரை காலியாகவே உள்ளது. படத்தின் பணிகள் தள்ளி போவதற்கு இது தான் முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.