Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சரி.. அவதார், டைட்டானிக் சாதனைகளை உண்மையில் மிஞ்ச முடியுமா?
பாகுபலி 2 உலக அளவில் வசூலில் ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்துவிட்டது இந்திய சினிமாவைப் பொறுத்த வரை ஒப்பிலாத சாதனைதான். சந்தேகமில்லை.
ஆனால் அதைத் தொடர்ந்து சிலர் எழுதி வருவதை நினைத்தால்தான் வேடிக்கையாக உள்ளது. அடுத்து அவதார் சாதனையை முறியடிப்போம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.
இந்தியப் படங்கள் உலகளவில் சாதனைப் புரிவது மனசுக்கு சந்தோஷமாகவே இருந்தாலும், நிஜம் என ஒன்றிருக்கிறதல்லவா?
முதலில் அரங்குகளின் எண்ணிக்கை. அதிகபட்சம் 20000 திரையரங்குகளில் வெளியாகும் அளவுக்கு பரந்து விரிந்த மார்க்கெட் கொண்டது ஹாலிவுட் சினிமா. அந்த இலக்கை நோக்கி இப்போதுதான் நாம் முன்னேற ஆரம்பித்துள்ளோம். அதை ஆரம்பித்து வைத்தவை ரஜினி படங்கள்.
இந்திய சினிமாவில் முதல் முறையாக ஆயிரம் திரைகளுக்கு மேல் வெளியான முதல் படம் சிவாஜி - த பாஸ். அதன் பிறகுதான் பல இந்திப் படங்களே ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகின.
அடுத்து அந்த சாதனையை அவரது எந்திரன்தான் முறியடித்தது. அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 அரங்குகள். அதன் பிறகு பாலிவுட் படங்கள் பிகே போன்றவை 5000 அரங்குகளுக்கு மேல் வெளியாகின. சமீபத்தில் வெளியான கபாலி அதிகபட்சமாக 6000 அரங்குகளில் வெளியானது.
இப்போது பாகுபலி 2 அதிகபட்சமாக 6500 அரங்குகளில் வெளியானது. அதன் பிறகு மேலும் 500 அரங்குகளில் கூடுதலாக வெளியானது. 10 நாட்களாக குறையாத வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. விளைவு 1000 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கைத் தாண்டியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் கிட்டத்தட்ட 14,500 அரங்குகளில் வெளியாகி, முதல் 50 நாட்கள் பெரும் கூட்டத்துடன் ஓடிய படம். மொத்தம் ரூ 18 ஆயிரம் கோடிகளைக் குவித்து உலகில் இன்றுவரை முதலிடத்தில் நிற்கிறது. அதாவது பாகுபலி 2 ஐ விட 18 மடங்கு வசூல்!
இதற்கு அடுத்த இடத்தில் உள்ள படம் இதே இயக்குநர் அதற்கு முன்பு இயக்கிய டைட்டானிக். 11 ஆயிரம் அரங்குகளில் வெளியான அந்தப் படம் 14200 கோடிகளைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ஸ்பைடர்மேன், ஜூராசிக் பார்க் வகை படங்கள் எல்லாமே இந்த இரண்டு படங்களுக்கும் அடுத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்... இந்தியப் படங்கள் அவதாரை மிஞ்சுவது எப்போது நடக்கும் என்று!