Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.. அது எப்படி தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ளன.
இந்த போட்டியில் டாப் 5 இடத்துக்குள் பிக் பாஸ் ஃபைனலுக்கு யார் செல்வார்கள் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை யார் தட்டித் தூக்கப் போகிறார்கள் என்பது இந்த வாரமே உறுதியாகி விடும்.
டிக்கெட் டு ஃபினாலேவை வெல்லப் போகும் அந்த ஒரு நபர் மட்டும் தான் லக்கியான நபராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா படத்தில் இடம்பெற்ற ஐட்டம் நம்பர்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்டு வாழ்த்து!
முடியப் போகுது
பிக் பாஸ் தமிழ் 5 சீசன் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ ஒரு வழியாக இன்னும் இரு வாரத்தில் முடியப் போகிறது. இந்த சீசனில் ஏகப்பட்ட பெண்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போ பெண்கள் கூட்டத்தை விட அதிக ஆண்களின் கூட்டம் தான் வழக்கம் போல அதிகளவில் தென்படுகிறது.
ஜென்டில்மேன் அக்ரிமென்ட்
இந்த சீசனில் அதிக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்ற நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக ஆண் போட்டியாளர்களே உள்ளே அடியெடுத்து வைத்தனர். ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போல் ஆண்களுக்குள்ளே ஒரு ஸ்ட்ராட்டஜியை திட்டமிட்டோ திட்டம் இடாமலோ உருவாக்கி வைத்திருக்கின்றனர். பெண் போட்டியாளர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு ஆண்கள் ஃபைனலுக்கு சென்று பின்னர் மோதிக் கொள்ளலாம் என்பது தான் அந்த ஸ்ட்ராட்டஜி என தெரிகிறது.
டைட்டில் வின்னர் யார்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்னதான் விளையாட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் டைட்டிலை வெல்வது நாமினேஷனில் இருந்து சேவ் ஆவது எல்லாமே மக்கள் அன்பை பெற்ற ஒருவரால் தான் முடியும். இதுவரை மக்களின் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வரும் ராஜு பாய் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. பிக் பாஸ் டீம் இந்த விவகாரத்தில் வேற பிளான் பண்ணாலும் அது பலனளிக்காது என்பது அவர்களுக்கே தெரியும்.
ரன்னர் அப்
அதே போல இந்த சீசனில் ரன்னர் அப் ஆக போவது பிரியங்கா தான் என்பதும் ராஜுவுக்கு அடுத்து அதிக வாக்குகளை அள்ளி வருவதன் மூலம் தெளிவாக தெரிகிறது. அன் அஃபிஷியல் போலிங்கிலும் இதுவரை ராஜு 22 சதவீத வாக்குகளுடன் முன்னிலையிலும், பிரியங்கா 15 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த வாரம் தெரிந்து விடும்
அன் அஃபிஷியல் போலிங்கின் படி ராஜு, பிரியங்காவை தொடர்ந்து மூன்றாவது இடத்தை இந்த வாரம் நிரூப் பிடித்துள்ளார். நான்காம் இடத்தில் தாமரை உள்ளார். பாவனி, சிபி, அமீர் மற்றும் சஞ்சீவ் அடுத்த அடுத்த இடத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காத்திருக்கின்றனர். இந்த வாரம் கமல் சொல்லும் சேவிங் ஆர்டர் மூலம் யார் டைட்டிலை வெல்வார் என்பது உறுதியாகி விடும்.
யார் அந்த லக்கி மேன்?
மக்கள் ஓட்டுக்களை கடந்து டிக்கெட் டு ஃபினாலேவுக்குள் செல்லக் கூடிய அந்த ஒரு லக்கி மேன் யார் என்பதும் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் விளையாடுவதில் இருந்தே தெரிந்து விடும். பெண் போட்டியாளர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்ட நிலையில், ராஜு, அமீர், சஞ்சீவ் மற்றும் சிபி இடையே கடும் போட்டி நடக்கும் என தெரிகிறது. அமீர் அல்லது சிபி டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.