Don't Miss!
- Technology போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- News இனி தங்கம் வாங்க முடியாது..ஆணுக்கு தங்கம், பெண்ணுக்கு பவுனு..! திண்டுக்கல் சீனிவாசனின் அடடே ஐடியா..!
- Lifestyle அடர்த்தியான, அழகான கூந்தலுக்கு வீட்டில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்யுங்கள்..!
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Finance ஆதார் கார்டு டெட்லைன் நெருங்குது.. மறக்காம இதை செய்திடுங்க.. இல்லாட்டி வருத்தப்படுவீங்க..!
- Automobiles மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
வலுக்கும் எதிர்ப்பு: குஷ்பு, லட்சுமி நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுமா?
சென்னை: குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை கோரி வலுப்பு அதிகரித்து வருகிறது.
தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், மலையாளத்தில் ஊர்வசி, தெலுங்கில் கீதா ஆகியோர் தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளிலேயே பல பஞ்சாயத்து நடந்து வருவது தனிக் கதை.
ஸ்ரீப்ரியா
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று முதலில் குரல் கொடுத்தார் நடிகை ஸ்ரீப்ரியா. இதையடுத்து நடிகை ராதிகா சரத்குமார் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
சாடல்
ஸ்ரீப்ரியா குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப்பஞ்சாயத்து என கடுமையாக சாடியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்தும் இரண்டு நடிகைகளையும் அவர் விமர்சித்துள்ளார். அந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரஞ்சனி
முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி குஷ்பு நிஜங்கள் நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மேலும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தடை
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஸ்ரீப்ரியா, ரஞ்சனி மட்டும் அல்ல ஏராளமான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.