Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி: விஷால் திட்டவட்டம்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரத்தில் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி என விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரத்தில் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி என அச்சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பதவி விலகக் கோரி, தயாரிப்பாளர்கள் சிலர் தி.நகர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள சங்கத்துக்கு பூட்டு போட்டனர். இந்த விவகாரத்தில் விஷால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றம் மூலம் ஆணைப் பெற்று சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இந்நிலையில் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், பூட்டு போட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் 20 பேருக்கு மேல் நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரம் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.
நான் என்றுமே தன்னிச்சையாக செயல்பட்டது கிடையாது. பழைய நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு இருந்ததால் தான் நாங்கள் போட்டியிட்டோம்.
சினிமா டிக்கெட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது வரவேற்கதக்க நடவடிக்கை. அதற்காக மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என அவர் கூறினார்.