Don't Miss!
- Finance வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை.. மறைமுக கட்டணமா.. ரொம்ப தப்பு..!!
- Sports ட்விஸ்ட்.. சிஎஸ்கேவை வீழ்த்த லக்னோ போட்ட பிளான்.. வேகப் புயலை திரும்ப கொண்டு வரும் கேஎல் ராகுல்!
- News TN Lok Sabha Election 2024 LIVE: தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது! ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
எம்.ஜி.ஆர். பாராட்டிய கமல்.. வறுத்தெடுக்கும் தலைவர்கள்.. அதையும் தாண்டி வாகை சூடுவாரா..?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் தனது ஐம்பத்து ஒன்பது ஆண்டுகளை முடித்து 60வது ஆண்டினுள் கடந்த 12-ம் தேதியன்று காலெடுத்து வைத்துள்ளார். ஒரு மனிதன் அறுபது ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பது, அதுவும் அந்த துறைக்கே பெருமை சேர்த்தபடி இருப்பதென்பது அசாதாரணமான செயல். அந்த பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் நம் கமல்! என்பது ஆகப்பெரிய விஷயம்.
வெறும் நடிகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக, நடன பயிற்சியாளராக என்று ஒரு திரைப்படத்தின் அத்தனை டெக்னிக்கல் சைடிலும் பணிபுரியும், அதுவும் மிக வெற்றிகரமாக பணிபுரியும் கலைஞன் நம் கமல். ஹீரோயினாக மட்டும்தான் அவரால் நடிக்க முடியாது! என்பார்கள். அதிலும் அவ்வை சண்முகி விதிவிலக்காகி நிற்கிறது.
இப்படிப்பட்ட கமலைப் பற்றி தமிழக சினிமாத்துறை ஆளுமைகள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள் உதிர்த்த வார்த்தைகளின் மிக முக்கியமான துளிகள் இங்கே....
"நடிக்கும்போது இயக்குநர்களின் கையில் வெறும் களிமண்ணாக கமல் என்றுமே இருந்ததில்லை. இயக்குநர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் கடவுள் அவர். இவர் மட்டும் அமெரிக்காவில் பிறந்திருந்து, ஹாலிவுட்டுக்கு கிடைத்திருந்தால் உலகப்புகழ்
அடைந்திருப்பார்" என்று பாலுமகேந்திரா கூறினார்.
"எதைச் செய்தாலும் அதை முதலில் முழுமையாக கற்று, அதன் பின் அதில் இறங்கி வெற்றி பெறுபவர் கமல்ஹாசன்." என்று சொல்லியவர் பாரதிராஜா.
தியாகி, துரோகி: சிம்பு பற்றி சொல்கிறாரா வெங்கட் பிரபு?
"நீங்கள் கமல்ஹாசனுக்கு என்ன தெரியுமென்று பார்க்காதீர்கள். கமல்ஹாசனுக்கு தெரிந்தவற்றில் ஏதேனும் ஒன்று நமக்கு தெரியுமா? என்று யோசிங்கள்." என்றார் எம்.ஜி.ஆர்.
"கலையில் பரிபூரண தெளிவு பெற்றதால் கமல் ஒரு கலைஞானி" என்றார் கருணாநிதி.
இப்படி பெரும் ஆளுமைகள் அத்தனை பேரும் திரையுலக கமல்ஹாசனை மிக மிக உன்னதமான வார்த்தைகளினால் பாராட்டி தள்ளியுள்ளனர். அப்பேர்ப்பட்ட கமல் சினிமா தாண்டி, இப்போது அரசியலிலும் நுழைந்துள்ளார். அவரை ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் போன்ற அரசியல் வித்தகர்கள் கலாமாஸ்டர் ரேஞ்சுக்கு வெச்சு கிழிக்கின்றனர்.
இந்த விமர்சன கற்கள் கமலை காயப்படுத்துகின்றனவா, அல்லது அக்கற்களை அடுக்கி அவற்றின் மேலேறி அவர் தமிழக முதல்வர் நாற்காலியை பிடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!
- ஜி.தாமிரா