தொடரும் இழுபறி... தீபாவளிக்கு ரிலீசாகுமா மெர்சல்?
சென்னை: வழக்கு, இடைக்காலத் தடை என அனைத்திலிருந்தும் தப்பித்த மெர்சல் படம் இன்னொரு சோதனையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
படம் சென்சாராகி, தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதுப் படங்களை வெளியிடுவதில்லை என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால் படம் தீபாவளிக்கு வருமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அந்த முடிவால் கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய படங்கள் எதுவும் ரிலீசாகாமல் உள்ளன.
இந்த நிலையில் விஜய்க்காக இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுமா அல்லது தொடருமா என்பதைக் காண திரையுலகம் காத்திருக்கிறது.
ரூ 145 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள மெர்சல் தீபாவளிக்கு வெளியாகாவிட்டால் பெரிய இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டி வரும்.


Click it and Unblock the Notifications











