Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா?: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சினிமா படங்களை ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மார்ச் 1ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடந்த சினிமா ஸ்டிரைக் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இனி சினிமா டிக்கெட்டின் விலை ரூ.150க்கு மேல் இருக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
|
படங்கள்
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.. என்று ட்வீட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
|
கிண்டல்
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உங்களிடம் படம் எதுவும் இல்லை என்பதால் இப்படி கொளுத்திப் போடுகிறீர்களா என்று நெட்டிசன்கள் அவரை கேட்டுள்ளனர்.
|
கலைஞர் டிவி
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டை பார்த்தவர்கள், உங்களின் சன் மற்றும் கலைஞர் டிவிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் ஒத்தி வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
சன்ரைசர்ஸ்
எல்லாம் சரி, உங்களின் சன் ரைசர்ஸ் அணியை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்கச் செய்தால் இன்னும் கவனத்தை ஈர்க்கலாமே என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.