டி.ராஜேந்தருக்காக வில்லியாகும் நமீதா?
சென்னை: டி. ராஜேந்தர் இயக்கும் காதல் படத்தில் வில்லியாக நடிக்க நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
பல காலம் கழித்து டி.ராஜேந்தர் படம் ஒன்றை இயக்குகிறார். தனக்கு பிடித்த காதல் கதையை கையில் எடுத்துள்ளார். படத்தில் இரண்டு காதல் ஜோடிகளாம்.
இந்த படத்தில் நடிக்குமாறு நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நமீதா
காதல் கதையில் வில்லியாக நடிக்குமாறு டி. ராஜேந்தர் நமீதாவிடம் கேட்டுள்ளாராம். கடந்த வாரம் நமீதா டி. ராஜேந்தரை சந்தித்து கதை கேட்டுள்ளாராம்.

இளைஞன்
முன்னதாக இளைஞன் படத்தில் நமீதா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டி. ராஜேந்தருக்காக அவர் வில்லியாவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கையெழுத்து
டி.ராஜேந்தரை சந்தித்து கதையை கேட்டபோதிலும் நமீதா இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையாம். திருமணத்திற்கு பிறகு அவர் பரத்தின் பொட்டு படத்தில் நடித்துள்ளார்.

சினிமா
தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் வைத்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நமீதா. பிக் பாஸ் வீட்டில் தன்னை வில்லி போன்று காட்டிவிட்டதாக மிகவும் வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி
திருமணத்திற்கு பிறகு நமீதா வெயிட் போட்டுவிட்டார். ஏற்கனவே பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது குண்டாகிவிட்டார். வெயிட் போட்டது பற்றி அவர் கவலைப்படவில்லை, மச்சான்ஸ் தான் ஃபீல் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











