Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொங்கலுக்கு வெளிவருமா பொன்னியின் செல்வன்!?.. அப்டேட் கொடுத்த கார்த்தி
சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இது மணிரத்னத்தின் பெருங்கனவு படமாகும்.
இந்த படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா என முன்னனி நடிகர்களின் பட்டாளமே நடிக்கிறது.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டை நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் லைவ்
கடந்த வாரம் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் சுல்தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியும், சுல்தான் படத்தின் நாயகி ரஷ்மிகாவும் வீடியோ கால் சாட்டில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இன்று உரையாடினர்.
ஆண்டின் இறுதியில்
இன்ஸ்டாகிராம் லைவ்வில் கார்த்தி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. கைதியின் 2ம் பாகம் குறித்து பேசிய கார்த்தி இந்த ஆண்டின் இறுதியில், அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.
சூர்யா தயாரிப்பில்
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் இணையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. முத்தையா இயக்கும் படத்தை தனது அண்ணன் சூர்யா தயாரிக்கவுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
70 சதவீதம்
அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை குறித்து பேசிய கார்த்தி, 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுவும் இந்தியாவில் கொரோனா பரவலின் நிலவரம் பொறுத்தே படம் வெளியாகும் என கூறியுள்ளார்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?