Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'அந்த' ஆசை வந்துவிட்டால் சினிமாவை விட்டு கிளம்பிடுவேன்: சாய் பல்லவி
Recommended Video
சென்னை: அந்த ஆசை வந்தால் சினிமாவை விட்டுவிட்டு கிளம்பிவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் படங்களிலும் நடித்துக் கொண்டு, மருத்துவத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறார் சாய் பல்லவி.
அதனால் படித்த படிப்புக்கு வேலை செய்யாமல் நடிகையாக மட்டும் உள்ளார். தனது பெயருக்கு முன்பு டாக்டர் என்ற பட்டத்தை கூட பயன்படுத்துவது இல்லை.
ஹீரோ
ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள தியா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோ நாகசவுரியா சாய் பல்லவி படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்து எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சீன் போட்டதாக புகார் தெரிவித்தார்.
சாய் பல்லவி
நான் படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேச மாட்டேன். நான் பேசாமல் இருந்ததால் நாகசவுரியா என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார் போல. அவர் என் மீது புகார் தெரிவித்த பிறகு அவருடன் பேச கால் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார் சாய் பல்லவி.
பிரச்சனை
நாகசவுரியா மட்டும் அல்ல எந்த ஹீரோக்களுடனும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் என் காட்சிகள் குறித்து மட்டுமே யோசிப்பேன் என்கிறார் சாய் பல்லவி.
சினிமா
படித்த படிப்புக்கு டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். அவருக்கு அந்த ஆசை சீக்கிரம் வர வேண்டும் என்று அவரை போட்டியாக நினைப்பவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.