Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'அந்த' ஆசை வந்துவிட்டால் சினிமாவை விட்டு கிளம்பிடுவேன்: சாய் பல்லவி
Recommended Video
சென்னை: அந்த ஆசை வந்தால் சினிமாவை விட்டுவிட்டு கிளம்பிவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் படங்களிலும் நடித்துக் கொண்டு, மருத்துவத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறார் சாய் பல்லவி.
அதனால் படித்த படிப்புக்கு வேலை செய்யாமல் நடிகையாக மட்டும் உள்ளார். தனது பெயருக்கு முன்பு டாக்டர் என்ற பட்டத்தை கூட பயன்படுத்துவது இல்லை.
ஹீரோ
ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள தியா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோ நாகசவுரியா சாய் பல்லவி படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்து எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சீன் போட்டதாக புகார் தெரிவித்தார்.
சாய் பல்லவி
நான் படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேச மாட்டேன். நான் பேசாமல் இருந்ததால் நாகசவுரியா என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார் போல. அவர் என் மீது புகார் தெரிவித்த பிறகு அவருடன் பேச கால் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார் சாய் பல்லவி.
பிரச்சனை
நாகசவுரியா மட்டும் அல்ல எந்த ஹீரோக்களுடனும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் என் காட்சிகள் குறித்து மட்டுமே யோசிப்பேன் என்கிறார் சாய் பல்லவி.
சினிமா
படித்த படிப்புக்கு டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். அவருக்கு அந்த ஆசை சீக்கிரம் வர வேண்டும் என்று அவரை போட்டியாக நினைப்பவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.