Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எந்த ஹீரோவிடமும் இல்லாத ஒன்று சந்தானத்திடம் உள்ளது: அது என்ன தெரியுமா?
Recommended Video
சென்னை: தற்போது உள்ள எந்த ஹீரோவிடமும் இல்லாத ஒன்று தன்னிடம் இருப்பதை சந்தானம் உணர வேண்டும்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றியும் பெற்றவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக நடித்தபோது ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அவர் வாங்கிய சம்பளத்தை பார்த்து சில பெரிய ஹீரோக்களே பொறாமைப்பட்டனர்.
லட்டு மாதிரி வந்த 2 ஹிட் வாய்ப்பு: வாசலோடு விரட்டிய நடிகை
சந்தானம்
நகைச்சுவை நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த சந்தானத்தையும் ஹீரோ ஆசை விடவில்லை. அதில் தவறும் இல்லை. ஆனால் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் அடம்பிடிப்பது சரியில்லை.
ரசிகர்கள்
நகைச்சுவை நடிகராக சந்தானத்தை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். டியர் சந்தானம், ஹீரோவாக நடிப்பதால் பிற நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தால் உங்களின் இமேஜ் பாதிக்காது. அந்த பயம் உங்களுக்கு வேண்டாம்.
காமெடியன்
நீங்கள் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு காமெடியனாகவும் நடிப்பை தொடர்ந்தால் தப்பில்லை. நீங்கள் நினைத்தால் ஹீரோ, காமெடியன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்த முடியும். ஆனால் அதுவே வேறு ஹீரோ நினைத்தால் முடியாது. இப்படி ஒரு பிளஸ் பாயிண்ட் உங்களுக்கு இருப்பதை புரிந்து கொள்வது நல்லது.
படம்
காமெடியனாக நடித்து சம்பாதித்துக் கொண்டே அந்த பணத்தை வைத்து நீங்கள் தாராளமாக ஹீரோவாக நடிக்கலாம். நீங்கள் மட்டும் அப்படி செய்தால் அனைவரும் உங்களை பார்த்து பொறாமைப்படும் காலம் வரும். சந்தானம் ஹீரோவாகி அடம் பிடிப்பதை பார்த்தால் தேசிங்கு பட விழாவில் இயக்குநர் சுந்தர் சி. கூறியது தான் நினைவுக்கு வருகிறது. "நம்மாளுக ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க" என்று சுந்தர் சி. பேசியது ஒரு வேளை சந்தானத்தை மனதில் வைத்து தானோ.