Don't Miss!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்!- இயக்குநர் கவுதமன்
சென்னை: பிரதமரைச் சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடக்க வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என்று இயக்குநர் கவுதமன் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் குதித்துள்ளதால், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது இயக்குநர் கவுதமன் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, அவர்களை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் கவுதமன் பங்கேற்றுள்ளார். போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று பேசிய அவர், "ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்த வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம்," என்றார்.