Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ரூ 100 கோடியை இளையராஜாவுக்கு வசூலித்து தருமா தயாரிப்பாளர் சங்கம்?
'எங்கள் அணி வெற்றி பெற்றால், இளையராஜாவுக்கு எக்கோ நிறுவனம் தரவேண்டிய காப்புரிமைத் தொகையான ரூ 100 கோடியை வசூலித்துத் தருவோம்' - கலைப்புலி தாணு தலைமையிலான அணி தயாாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் மிக முக்கியமானது இது.
காரணம், வசூலிக்கப்படும் ரூ 100 கோடியில் பாதி இளையராஜாவுக்கு, மீதி தயாரிப்பாளர் சங்கத்துக்கு.
இப்படி மட்டும் நடந்தால், இருப்பதிலேயே பணக்கார சினிமா சங்கமாகிவிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
இளையராஜாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் ராயல்டி எனும் காப்புரிமைத் தொகையைக் கொடுக்காமலேயே அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை விற்று காசு பார்த்து வருகிறார்கள் எக்கோ, அகி மியூசிக் உள்ள இசை வெளியீட்டு நிறுவனங்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அவர் பாடல்கள், இசையை இனி எந்த நிறுவனமும் விற்கக் கூடாது என தடை உத்தரவு பெற்றுள்ளார் இளையராஜா. இனி அனைத்துப் பாடல்களையும் இளைராஜாவே தன் சொந்த பேனரில் வெளியிடவிருக்கிறார்.
இளையராஜாவுக்கு தராமல் ஏமாற்றப்பட்ட காப்புரிமைத் தொகை ரூ 100 கோடி என கணக்கிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதற்காக அனைத்துத் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு, இளையராஜா இதுவரை இசையமைத்த அனைத்துப் படங்களின் இசை உரிமையையும் அவருக்கே வழங்கியுள்ளனர்.
எனவே இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமான இசையை, இதுவரை விற்று ஈட்டப்பட்ட பல நூறுகோடி ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை ராஜாவுக்கு வழங்கக் கோரி வழக்கும் தொடரவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.